ஈரானிலிருந்து ஏவப்பட்ட ட்ரோன்களை இடைமறித்ததாக அமீரகம் அறிவிப்பு
ஈரானிலிருந்து ஏவப்பட்ட இரண்டு ட்ரோன்களை தனது வான் பாதுகாப்புப் படைகள் இடைமறித்ததாக ஐக்கிய அரபு அமீரகம் (UAE) தெரிவித்துள்ளது.
அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ஈரானிலிருந்து வரும் தாக்குதல்களுக்கு எதிராக வான் பாதுகாப்பு அமைப்புகள் தொடர்ந்து செயல்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது.
மேலும், இந்த தாக்குதல்கள் தொடங்கியதிலிருந்து இதுவரை 551 பாலிஸ்டிக் ஏவுகணைகள், 29 குரூஸ் ஏவுகணைகள் மற்றும் 2,265 ட்ரோன்கள் (UAVs) எதிர்கொள்ளப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




