ஐரோப்பா

முடிவுக்கு வரும் உக்ரைன் போர் – புட்டின் வெளியிட்ட செய்தி!

உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர தான் எண்ணுவதாக ரஷ்ய ஜனாதிபதி புட்டின் தெரிவித்துள்ளார்.

மொஸ்கோவில்  மிக எளிமையாக நடைபெற்ற வெற்றி தினக் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டப்பின் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும் கருத்து வெளியிட்ட அவர்,  ஐரோப்பாவிற்கான புதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாகவும், தனது விருப்பமான பேச்சுவார்த்தைப் பங்காளியாக ஜெர்மனியின் முன்னாள் அதிபர் கெர்ஹார்ட் ஷரோடர் (Gerhard Schroeder) இருப்பார் என்றும் அவர் கூறினார்.

இதற்கிடையே அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகத்தால் முன்னெடுக்கப்பட்ட அமைதிப் பேச்சுவார்த்தைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கிரெம்ளின் தெரிவித்துள்ளது.

மொஸ்கோ “சிறப்பு இராணுவ நடவடிக்கை” என்று அழைக்கும் இந்த நடவடிக்கையில், ரஷ்யாவின் பல்வேறு போர் இலக்குகள் அனைத்தும் நிறைவேறும் வரை தொடர்ந்து போராடுவோம் என்றும் அவர் மீண்டும்  சூளுரைத்தார்.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!