ஏர்பஸ் கொள்வனவு ஊழல் : மஹிந்தவுக்கு அழைப்பாணை!
2013ஆம் ஆண்டில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ஆறு ஏர்பஸ் ஏ-330 விமானங்களையும் எட்டு ஏ-350 விமானங்களையும் வாங்கியபோது, அப்போதைய ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேனவும் அவரது மனைவி நியோமாலி விஜேநாயக்கவும் 2 மில்லியன் அமெரிக்க டொலர் லஞ்சம் பெற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது. தற்போது கபில சந்திரசேன தற்கொலை செய்துக்கொண்டு உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் அப்போது ஜனாதிபதியாக இருந்த மஹிந்த ராஜபக்க்ஷவை இலஞ்ச ஊழல் ஆணைக்குழு விசாரணைக்கு அழைத்துள்ளது.
வரும் 12 ஆம் திகதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு கடிதம் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கடிதம் இன்று (09) தங்காலையில் உள்ள கார்டன் மாளிகையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.





