ஐக்கிய அரபு அமீரகம் மீது இரண்டாவது நாளாக தொடரும் தாக்குதல்!
ஐக்கிய அரபு அமீரகம் மீது ஈரான் இரண்டாவது நாளாக தாக்குதல் நடத்திவருகிறது.
ஈரான் ஏவும் ஏவுகணை மற்றும் ட்ரோன்களை ஐக்கிய அரபு அமீரகம் இடைமறித்து வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதற்கிடையே அமெரிக்கப் பாதுகாப்புச் செயலர் பீட் ஹெக்ஸெத், அமெரிக்கா மோதலை நாடவில்லை என்று கூறியபோதிலும், ஈரான் வர்த்தகக் கப்பல்களைக் குறிவைத்தால் அதற்கு எதிராக ‘கடுமையான படைபலம்’ பயன்படுத்தப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.




