பாலஸ்தீன அமைப்பைச் சேர்ந்த நால்வர் குற்றவாளிகளாக அறிவிப்பு!
பிரிஸ்டலில் (Bristol) உள்ள இஸ்ரேலிய பாதுகாப்பு நிறுவனத்தின் இங்கிலாந்து தளத்தில் புகுந்து தாக்குதல் நடத்தியதற்காக, பாலஸ்தீன நடவடிக்கை அமைப்பைச் சேர்ந்த நான்கு ஆர்வலர்கள் குற்றவாளிகளாக கண்டறியப்பட்டுள்ளனர்.
சார்லட் ஹெட் (Charlotte Head), சாமுவேல் கார்னர் (Samuel Corner), லியோனா காமியோ (Leona Kamio) மற்றும் ஃபாத்திமா ராஜ்வானி (Fatema Rajwani ) ஆகிய நால்வரும் ஆகஸ்ட் 6, 2024 அன்று, எல்பிட் சிஸ்டம்ஸ் தொழிற்சாலைக்குள் புகுந்து, அங்கு வைக்கப்பட்டிருந்த உபகரணங்களுக்கு சேதம் விளைவித்தனர்.
மக்களைக் கொல்வதற்குப் பயன்படுத்தப்படும் “ட்ரோன்கள் மற்றும் ஆயுதங்களைச் செயலிழக்கச் செய்வதே” தங்கள் நோக்கம் என்று அந்த ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இது தொடர்பில் விசாரணை நடத்திய வூல்விச் கிரவுன் நீதிமன்றம் ( Woolwich Crown Court) அவர்களை குற்றவாளிகளாக அறிவித்து தீர்ப்பளித்துள்ளது.




