ஈரானிய மக்களுக்கு ஆயுதங்களை வழங்குவோம் – லிண்ட்சே வலியுறுத்து!
தெஹ்ரான் அரசாங்கத்திற்கு எதிராக ஒரு மக்கள் புரட்சியைத் தூண்டுவதற்கு ஏதுவாக ஒரு தீர்மானத்தை கொண்டுவந்து ஈரானிய மக்களுக்கு நேரடியாக ஆயுதங்களை வழங்குமாறு தென் கரோலினா குடியரசுக் கட்சி செனட்டர் லிண்ட்சே கிரஹாம் (Sen. Lindsey Graham) அமெரிக்க அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.
ஹோர்முஸ் ஜலசந்தியில் அமெரிக்கா-ஈரான் மோதல்கள் தீவிரமடைந்திருந்த சமயத்தில் கிரஹாம் இதனை முன்மொழிந்துள்ளார்.
இந்த அணுகுமுறை அமெரிக்கப் படைகளை அனுப்புவதைத் தவிர்த்து, மில்லியன் கணக்கான ஈரானியர்கள் கிளர்ந்தெழ வலுவூட்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
டிசம்பர் பிற்பகுதி மற்றும் ஜனவரி மாத ஆர்ப்பாட்டங்களின் போது, ஈரானியப் போராட்டக்காரர்களுக்குத் துப்பாக்கிகளை அனுப்பத் தனது நிர்வாகம் முயன்றதாக ஜனாதிபதி ட்ரம்ப் முன்னதாக கூறியிருந்த நிலையில் தற்போது லிண்ட்சே இந்த யோசனையை முன்வைத்துள்ளார்.





