பாகிஸ்தானின் அமைதி முயற்சி தொடரும்!
ஈரான் மற்றும் பாகிஸ்தானின் ஆகிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களுக்கிடையில் தொலைபேசி ஊடாக கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
பிராந்தியத்தில் அமைதி மற்றும் பாதுகாப்பை நிலைநிறுத்துவது குறித்து இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
மோதல்களைத் தீர்க்க பாகிஸ்தான் மேற்கொண்டு வரும் ஆக்கபூர்வமான சமாதான முயற்சிகளுக்கு ஈரான் வெளிவிவகார அமைச்சர் பாராட்டுக்களைத் தெரிவித்தது.
பிராந்தியத்தில் நிலையான அமைதியை ஏற்படுத்த பாகிஸ்தான் தொடர்ந்து தனது தூதரகப் பணிகளை முன்னெடுக்கும் என்று பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் உறுதியளித்துள்ளார்.
ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கிடையில் 2ஆம் சுற்று அமைதி பேச்சை ஆரம்பித்துவைப்பதற்கு பாகிஸ்தான் தீவிர முயற்சிகளை முன்னெடுத்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.





