பாகிஸ்தான் – குவைட் வெளியுறவு அமைச்சர்கள் பிராந்திய பதற்றம் குறித்து ஆலோசனை
பாகிஸ்தான் மற்றும் குவைட் வெளியுறவு அமைச்சர்கள், மாறிவரும் பிராந்திய சூழ்நிலை மற்றும் அதன் பொருளாதார தாக்கங்கள் குறித்து முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளனர்.
பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சர் முகமது இஷாக் டார் (Mohammad Ishaq Dar), தனது குவைட் சகாவான ஷேக் ஜர்ரா ஜாபர் அல்-அஹ்மத் அல்-சபா உடன் இந்த விவாதத்தை மேற்கொண்டார்.
பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் எக்ஸ் (X) தளத்தில் வெளியிட்ட அறிக்கையில், “உம்மா” (Ummah) மற்றும் சர்வதேச சமூகத்திற்கான நீடித்த அமைதி, பாதுகாப்பை மேம்படுத்தும் பாகிஸ்தானின் முயற்சிகளை குவைத் அமைச்சர் பாராட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான முடங்கியுள்ள பேச்சுவார்த்தைகளில் மத்தியஸ்தம் செய்து வரும் தனது நாடு, இராஜதந்திர முயற்சிகளை தொடர்ந்து முன்னெடுத்து வருவதாக இஷாக் டார் வலியுறுத்தியதாகவும் கூறப்பட்டுள்ளது.
பிராந்திய பதற்றம் அதிகரித்துள்ள சூழலில், இந்த சந்திப்பு முக்கியமானதாக பார்க்கப்படுகிற





