யேமன் கடற்கரையில் எண்ணெய் கப்பல் கைப்பற்றப்பட்டது – ஆயுதமேந்திய நபர்கள் தாக்குதல்
யேமன் நாட்டின் ஷப்வா (Shabwa) மாகாணக் கடற்கரைக்கு அருகில், அடையாளம் தெரியாத ஆயுதமேந்திய நபர்கள் எம்/டி யுரேகா (MT Eureka) என்ற எண்ணெய் கப்பலைக் கைப்பற்றியுள்ளதாக யேமன் கடலோரக் காவல்படை தெரிவித்துள்ளது.
தாக்குதலாளர்கள் கப்பலில் ஏறி அதன் கட்டுப்பாட்டைப் பெற்ற பின்னர், அதை ஏடன் வளைகுடா வழியாக சோமாலியா (Somalia) கடற்பகுதி நோக்கி செலுத்திச் சென்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கு முன்பாக, முக்கல்லா (Mukalla) துறைமுகத்திலிருந்து சுமார் 84 கடல் மைல்கள் தென்மேற்கே, ஒரு “பச்சை நிறப் படகு” மற்றும் அதனுடன் வந்த மீன்பிடிக் கப்பல் சந்தேகத்திற்கிடமாக அணுகியதாக ஒரு சரக்கு கப்பல் தகவல் அளித்திருந்தது.
இந்த தகவலை பிரித்தானியாவின் கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் பிரிவு வெளியிட்டுள்ளது.
இந்த சம்பவம் ஏடன் வளைகுடா மற்றும் செங்கடல் கடற்பாதுகாப்பு குறித்த கவலைகளை மேலும் அதிகரித்துள்ளது.





