உலகம் செய்தி

“Golders Green தாக்குதல் பயங்கரவாதச் செயல்”

லண்டன் Golders Green பகுதியில் நடந்த கத்திக்குத்து தாக்குதல் பயங்கரவாதச் செயல் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தாக்குதலில் படுகாயம் அடைந்த யூத சமூகத்தை சேர்ந்த இருவர் வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவருகின்றனர். அவர்களின் நிலைமை தற்போது சீராக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

அதேவேளை, யூத சமூகத்தின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதை இச்சம்பவம் உணர்த்துகின்றது என யூத சமூகத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

பிரித்தானியப் பிரதமர் சேர் கீர் ஸ்டார்மர், குறித்த “யூத எதிர்ப்புத் தாக்குதல்” முற்றிலும் அதிர்ச்சியளிப்பதாகத் தெரிவித்ததுடன், யூதச் சமூகத்தைப் பாதுகாக்க கூடுதல் நிதி ஒதுக்கீடு அவசியம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

பிரித்தானிய மன்னர் சார்லஸ் இந்தச் சம்பவம் குறித்து மிகுந்த கவலையடைந்துள்ளதாக பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!