போர் நிறுத்தம் நீட்டிக்கப்படாது – ட்ரம்ப் அறிவிப்பு!
போர் நிறுத்தத்தை நீட்டிக்க விரும்பவில்லை என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
நாளைய தினத்துடன் தற்போது அமுலில் உள்ள போர் நிறுத்தம் காலாவதியாகவுள்ள நிலையில் ட்ரம்பின் இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பில் CNBC ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், “ஈரான் ஒரு ஒப்பந்தம் செய்தால், அவர்களால் மிகவும் நல்ல நிலையை அடைய முடியும். பேச்சுவார்த்தை நடத்துவதைத் தவிர ஈரானிய அதிகாரிகளுக்கு “வேறு வழியில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையே இஸ்லாமாபாத்தில் நடைபெற்று வரும் அமைதி பேச்சுவார்த்தைகளில் பங்குக்கொள்ள ஈரான் சார்பில் எந்த தூதுக்குழுவும் அனுப்பப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
அடுத்தகட்டப் பேச்சுவார்த்தைகளில் பங்கேற்பது குறித்து ஈரான் இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை, என்றும் கூறப்படுகிறது.





