இஸ்ரேல்–லெபனான் தலைவர்கள் இடையே இன்று பேச்சு நடக்குமா? குழப்பம் நீடிப்பு
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இன்று லெபனான் ஜனாதிபதி ஜோசப் அவுனுடன் கலந்துரையாடுவார் என இஸ்ரேலின் அமைச்சரவை பாதுகாப்பு உறுப்பினர் காலியா கம்லியல் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க நேரப்படி புதன்கிழமை இரவு, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில், இஸ்ரேல் மற்றும் லெபனான் தலைவர்கள் நாளை பேச்சு வார்த்தை நடத்துவார்கள் என பதிவு செய்திருந்தார்.
ஆனால், வியாழக்கிழமை லெபனான் ஜனாதிபதி அலுவலகம் இந்த தகவலை மறுத்து, இத்தகைய பேச்சுவார்த்தைகள் குறித்து தங்களுக்கு தெரியாது என்று தெரக்ரவித்துள்ளது.
இந்நிலையில், பேச்சுவார்த்தைகள் உண்மையில் நடைபெறுமா என்ற குழப்பம் நீடித்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன .





