உலகம் செய்தி

ட்ரம்பின் துறைமுக முற்றுகை வியூகத்துக்கு ஈரான் ராணுவம் பதிலடி!

ஈரான்மீதான அமெரிக்காவின் துறைமுக முற்றுகைத் திட்டத்துக்கு உரிய பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

துறைமுகங்கள் முடக்கப்பட்டால் அதனை கடற் கொள்ளை செயலாகக் கருதி பதிலடி கொடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஹார்முஸ் நீரிணை தமது நாட்டு கட்டுப்பாட்டிலேயே இருக்க வேண்டும் என ஈரான் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. எனினும், இதற்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

ஹார்முஸ் நீரிணையை திறக்குமாறு பல தடவைகள் ஈரானிடம் ட்ரம்ப் வலியுறுத்திவிட்டார். ஆனால் ஈரான் இதற்கு இணங்கவில்லை.

இந்நிலையிலேயே துறைமுக முற்றுகை தொடர்பான எச்சரிக்கையை ட்ரம்ப் வெளியிட்டுள்ளார்.

இவ்வாறானதொரு பின்புலத்திலேயே ஈரானிய துறைமுகங்கள் தாக்கப்பட்டால் ஒட்டுமொத்த பாரசீக வளைகுடா பிராந்தியத்தின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகும் என ஈரான் ராணுவம் எச்சரித்துள்ளது.

அமெரிக்காவின் அச்சுறுத்தல் சர்வதேச சட்டத்துக்கு எதிரானது எனவும் ஈரான் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!