அமெரிக்கப் பயணத்தை ஒத்திவைத்த லெபனான் பிரதமர்
லெபனானின் தற்போதைய உள்நாட்டு நிலையை கருத்திற்கொண்டு, தனது அமெரிக்க மற்றும் ஐக்கிய நாடுகள் சபை பயணத்தை ஒத்திவைத்துள்ளதாக பிரதமர் நவாஃப் சலாம் அறிவித்துள்ளார்.
அடுத்த வாரம் அமெரிக்காவில் இஸ்ரேல் மற்றும் லெபனான் அதிகாரிகள் இடையே பேச்சுவார்த்தைகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த முடிவு வெளியாகியுள்ளது.
இதேவேளை, ஹிஸ்புல்லா அமைப்புடன் தொடர்புடைய லெபனான் நாடாளுமன்ற உறுப்பினர் ஹசன் ஃபத்லல்லா, லெபனான்–இஸ்ரேல் நேரடி பேச்சுவார்த்தைகளை அந்த அமைப்பு நிராகரிப்பதாக தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கை தேசிய ஒப்பந்தம், அரசியலமைப்பு மற்றும் சட்டங்களுக்கு எதிரானது என்றும், இது நாட்டின் உள்நாட்டு ஒருமைப்பாட்டை பாதிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.




