சமூக ஊடக தடை : இங்கிலாந்தில் புதிய கணக்கெடுப்பு!
16 வயதுக்குட்பட்டவர்களுக்குச் சமூக ஊடகங்களைத் தடை செய்வதற்கான ஒரு ஆய்வை இங்கிலாந்து அரசாங்கம் தொடங்கியுள்ளது.
இந்நிலையில் தற்போது சமூக ஊடகத் தடை குறித்த ஒரு மாதிரிச் சோதனையையும் நடத்தி வருகிறது. இது தொடர்பில் கருத்து கணிப்பு ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அதில் இணைய தனியுரிமையில் குழந்தைகளின் பெயர்கள், உண்மையான வயதுகள் மற்றும் அவர்கள் வசிக்கும் இடம் ஆகியவை தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
அதில், 4 பெற்றோரில் 3 பேர், தங்கள் பிள்ளைகளால் இணையத்தில் பாதுகாப்பான தேர்வுகளைச் செய்ய முடியாது என்று கவலைப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.




