இஸ்லாமாபாத்தில் களமிறங்கியது அமெரிக்க தூதுக்குழு!
ஈரானுடனான அமைதி பேச்சுக்காக அமெரிக்க பிரதிநிதிகள் குழு பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் வந்துள்ளனர்.
துணை ஜனாதிபதி JD Vance தலைமையிலான அமெரிக்க தூதுக்குழுவினரை, பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட குழுவினர் வரவேற்றனர்.
பாகிஸ்தான் ராணுவ தளபதியும் விமான நிலையம் சென்றிருந்தார்.
அமெரிக்கத் தலைவர்களுடன் நடத்திய சந்திப்பின் போது உலகளாவிய அமைதிக்கான அமெரிக்காவின் முயற்சியை பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் பாராட்டியுள்ளார்.
ஈரான் மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளும் தங்களுக்கு இடையிலான மோதல்களைத் தீர்க்க ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.





