ஹர்முஸ் நீரிணை திறப்பு: இந்திய, ஜப்பான் வெளிவிவகார அமைச்சர்கள் ஆராய்வு!
மேற்காசியாவில் நிலவும் பதற்றமான சூழ்நிலை குறித்து இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களுக்கிடையில் தொலைபேசி ஊடாக கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
ஹார்முஸ் நீரிணை வழியாக கப்பல் போக்குவரத்து தடையின்றி இடம்பெறுவது உறுதி செய்யப்பட வேண்டும் என இரு நாட்டு அமைச்சர்களும் வலியுறுத்தினர்.
பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்டவும், எரிசக்தி பாதுகாப்பை பலப்படுத்தவும் இரு நாடுகளும் ஒன்றிணைந்து செயல்பட உறுதிபூண்டுள்ளன.
மேற்காசிய போரால்; உயிரிழந்த இந்தியர்களுக்காக ஜப்பான் அமைச்சர் தனது ஆழ்ந்த இரங்கலை வெளியிட்டார்.





