அமெரிக்காவின் அச்சுறுத்தல் போர்க்குற்றங்களை இயல்பாக்கும் முயற்சி – ஈரான் விசனம்
அமெரிக்கா, ஈரானின் உட்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்துவதாக அச்சுறுத்தினால், அதற்கு “ஒரு தீர்க்கமான மற்றும் விரிவான பதிலடி” கொடுக்கப்படும் என ஈரானின் வெளியுறவு அமைச்சர் எச்சரித்தார்.
அமெரிக்காவின் அச்சுறுத்தலை “போர்க்குற்றங்களையும் இனப்படுகொலையையும் இயல்பாக்கும் முயற்சி” என்று ஈரான் விமர்சித்துள்ளது.
ஈரானின் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அச்சுறுத்தல்கள் பிராந்திய பதற்றத்தை அதிகரிக்கின்றன என்றும், இராஜதந்திர தீர்வு தேவைப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.





