இலங்கை செய்தி

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி எங்கே – அரசாங்கத்திடம் சஜித் கேள்வி

இலங்கையில் கடந்த 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவது அரசாங்கத்தின் அடிப்படைப் பொறுப்பாகும் என அந்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதல் இடம்பெற்று ஏழு ஆண்டுகள் கடந்துள்ள போதிலும், கடந்த கால மற்றும் தற்போதைய அரசாங்கங்கள் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தத் தவறிவிட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தத் தாக்குதலில் உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதுவரை நீதி வழங்கப்படாமை ஒரு தேசமாக நாம் அடைந்த பாரிய தோல்வியென்றும் அவர் ஆதங்கம் வெளியிட்டார்

உண்மை கண்டறியப்படுவதும், நீதியை உறுதிப்படுத்துவதும் தவிர்க்க முடியாத ஒன்றாகும். சட்டத்தின் ஆட்சி மற்றும் வெளிப்படைத்தன்மையைப் பேணுவது அரசாங்கத்தின் கடமையாகும்.

இவ்வாறான துயரங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க அனைத்து இனங்கள் மற்றும் மதங்களுக்கு இடையே நம்பிக்கையையும்
அமைதியையும் கட்டியெழுப்புவது அவசியமானது.

பாதிக்கப்பட்டவர்களை நினைவு கூர்வதுடன், உண்மை மற்றும் நீதிக்கான கூட்டு அர்ப்பணிப்பை உறுதிப்படுத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

Sainth

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!