இலங்கை செய்தி

கணித, உயிரியல் பிரிவுகளில் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி மாணவர்கள் முதலிடம்!

வெளியாகியுள்ள 2025 ஆம் ஆண்டுக்கான ஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளில், யாழ்ப்பாணம் மாவட்ட மட்டத்தில் கணித மற்றும் உயிரியல் பிரிவுகளில் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி மாணவர்கள் முதலிடங்களைப் பெற்றுச் சாதனை படைத்துள்ளனர்.

கணிதப் பிரிவில் அனுராகந்தன் விஸ்வகாந்தன் 3 ஏ சித்திகளைப் பெற்று மாவட்ட மட்டத்தில் முதலிடத்தையும், தேசிய ரீதியில் 12 ஆவது இடத்தையும் பெற்றுள்ளார்.

அதேவேளை உயிரியல் பிரிவில் சந்திரபாலா கதுசன் 3 ஏ சித்திகளைப் பெற்று மாவட்ட மட்டத்தில் முதலிடத்தையும், தேசிய ரீதியில் 20 ஆவது இடத்தையும் பெற்றுள்ளார்.

பொறியியல் தொழில்நுட்பப் பிரிவில் உமாபதி கிருஷாந்த் 2 ஏ, பி சித்தியைப் பெற்று மாவட்ட மட்டத்தில் இரண்டாம் இடத்தையும், தேசிய ரீதியில் 50 ஆவது இடத்தையும் பெற்றுள்ளார்.

ஹாட்லிக் கல்லூரியில் கணிதப் பிரிவில் 10 மாணவர்கள் 3 ஏ சித்திகளையும், 2 மாணவர்கள் 2 ஏ, பி சித்திகளையும் பெற்றுள்ளதுடன், உயிரியல் பிரிவில் 6 மாணவர்கள் 3 ஏ சித்திகளையும், 4 மாணவர்கள் 2 ஏ, பி சித்திகளையும் பெற்றுள்ளனர்.

வர்த்தகப் பிரிவில் 2 மாணவர்கள் 3 ஏ சித்திகளையும், கலைப் பிரிவில் ஒரு மாணவன் 3 ஏ சித்திகளையும் பெற்றுள்ளனர்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!