ஈரானில் 65 உளவாளிகள் கைது!
ஈரான் மத்திய மார்க்காசி மாகாணத்தில் Markazi province எதிரி நாடுகளுடன் தொடர்பு வைத்திருந்தனர் எனக் கூறப்படும் 65 பேர் அந்நாட்டு பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிடிபட்டவர்கள் பயங்கரவாதக் குழுக்களைச் சேர்ந்தவர்கள் என்றும், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் போன்ற நாடுகளுக்கு ரகசியத் தகவல்களை வழங்கிய உளவுப் பிரிவினராகச் செயல்பட்டதாகவும் ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.
தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விளைவிப்பதாகக் கருதப்படும் நபர்களைக் கண்டறிந்து தண்டிப்பதில் ஈரான் அரசு அதிகத் தீவிரம் காட்டி வருகிறது.
இந்த அதிரடி நடவடிக்கைகள் அனைத்தும் நாட்டின் உள்நாட்டு பாதுகாப்பை உறுதிப்படுத்தும் முயற்சியாக அந்நாட்டு அதிகாரிகளால் பார்க்கப்படுகிறது.
இவ்வாறு அந்நிய சக்திகளுக்கு உடந்தையாக இருப்பவர்களைக் குறிவைத்து ஈரானியப் படைகள் தொடர்ச்சியான சோதனைகளை மேற்கொண்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.





