மக்களுக்கு வெளியேற்ற உத்தரவு – சவூதி, ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடர் தாக்குதல்
சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடர்ச்சியாக இடம்பெறும் தாக்குதல்களால் பலர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த தாக்குதல்கள் நேற்றிரவு இடம்பெற்றதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும் இன்று வெடிப்புச் சத்தங்கள் கேட்டதைத்தொடர்ந்து மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது
சவூதி அரேபியாவின் அல்-கர்ஜ் பகுதியில் ட்ரோன் பாகங்கள் வீழ்ந்ததில் இருவர் காயமடைந்துள்ளதுடன், பல வாகனங்கள் மற்றும் மூன்று வீடுகள் சேதமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் மத்திய கிழக்கில் தொடர்ந்தும் பெரும் பதற்றம் நிலவுவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.





