வாழ்க்கைச் செலவு அழுத்தம் – பிரித்தானிய நிதி அமைச்சர் வணிகங்களுக்கு கடும் எச்சரிக்கை
வாழ்க்கைச் செலவு அழுத்தங்கள் அதிகரித்து வரும் நிலையில், பிரித்தானிய நிதி அமைச்சர் ரேச்சல் ரீவ்ஸ் (Rachel Reeves) வணிகங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஈரான் போரின் பின்னணியில், அதிக இலாபம் ஈட்டும் முயற்சிகளை அரசாங்கம் பொறுத்துக்கொள்ளாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தக் கருத்துக்கு கல்விச் செயலாளர் பிரிட்ஜெட் பிலிப்சன் (Bridget Phillipson) ஆதரவு தெரிவித்துள்ளார்.
விலைகள் குறைய வேண்டிய இடத்தில், அவை நுகர்வோருக்கு மாற்றமாக அதிகரிக்கின்றனவா
என்பதே முக்கிய சவாலாக இருப்பதாக அவர் கூறினார்.
இந்த எச்சரிக்கை பிரித்தானிய மக்களைப் பாதுகாக்கும் நோக்கத்திலேயே விடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
குடும்பங்கள் அதிகமான வாழ்க்கைச் செலவுச் சுமைகளை எதிர்கொண்டு வருவதாகவும்,
அதற்காக அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.
இதில் எரிசக்தி கட்டணங்களில் மாற்றங்கள், இரண்டு குழந்தைகள் வரம்பு நீக்கம், காலை உணவு திட்டங்கள் மற்றும் குழந்தை பராமரிப்பு சேவைகள் விரிவாக்கம் ஆகியவை அடங்கும்.
இந்நிலையில், மோதலின் விளைவாக நுகர்வோரின் செலவுகள் அதிகரித்துள்ளன என்பதும் வலியுறுத்தப்பட்டுள்ளது.




