உலகம் கல்வி

“ஹார்முஸ் நீரிணையில் இருந்து தப்பிய முதல் கப்பல்”

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே போர் வெடித்தபோது ஹார்முஸ் நீரிணையில் சிக்கிக்கொண்ட ஜப்பானிய சரக்குக் கப்பல், அங்கிருந்து துணிச்சலாகத் தப்பித்து தற்போது மேற்கு ஆஸ்திரேலியாவை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கின்றது.

துபாயில் சரக்குகளை இறக்கிவிட்டுத் திரும்பிய அயர்ன் மெய்டன் என்ற அந்த கப்பல், ஈரானின் தாக்குதல் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் தனது இருப்பிட சமிக்ஞைகளை அணைத்துவிட்டு நள்ளிரவில் மிகவும் சாதுரியமாகச் செயல்பட்டது.

இந்தப் போர்ச் சூழலில் இருந்து பத்திரமாக வெளியேறிய முதல் கப்பலாக இது கருதப்படுவதால் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.

பாதுகாப்பு காரணங்களுக்காக சீன உரிமையாளர் என்ற போலி அடையாளத்தைப் பயன்படுத்தி இக்கப்பல் தனது பயணத்தை வெற்றிகரமாகத் தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது.

Dila

About Author

You may also like

கல்வி

கல்வி அமைச்சர் வெளியிட்ட செய்தி

பாடசாலை 3ஆம் தவணை முடிவதற்குள் அனைத்து மாணவர்களுக்கும் சீருடை வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். சீன நன்கொடையின் கீழ் இலங்கை பெற்றுக்கொண்ட பாடசாலை
கல்வி

வரும் திங்களன்று 1ஆம் தவணை ஆரம்பம்

2022 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணை இன்றுடன் (24) நிறைவடைவதாகவும் 2023ஆம் ஆண்டுக்கான  முதலாம் தவணை எதிவரும் திங்கட்கிழமை (27) ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த
error: Content is protected !!