மே 15 இல் திரைக்கு வருகிறது ‘கருப்பு’?
நடிகர் சூர்யா நடித்துள்ள ‘கருப்பு’ திரைப்படம் எதிர்வரும் மே 15 ஆம் திகதி வெளியிடப்படவுள்ளதென தெரியவருகின்றது.
படப்பிடிப்புகள் எல்லாம் நிறைவடைந்திருந்தாலும், தமிழக சட்டபேரவைத் தேர்தல் திகதி வெளியாகும்வரை படக்குழுவினர் காத்திருந்தனர்.
தேர்தல் காலப்பகுதியை வைத்து தமது படத்தின் வெளியீட்டு திகதி நிர்ணயிக்க அவர்கள் திட்டமிட்டிருந்தனர்.
இந்நிலையில் தேர்தல் திகதி நேற்று அறிவிக்கப்பட்டது. ஏப்ரல் 23ஆம் திகதி தேர்தலும், மே 4-ம் ஆம் வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறானதொரு சூழ்நிலையிலேயே ‘கருப்பு’ படத்தினை மே 15-ம் திகதி வெளியிடலாமா என பரிசீலிக்கப்பட்டுவருகின்றது.
ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா, திரிஷா, இந்திரன்ஸ், ஸ்வாசிகா, அனகா மாயா ரவி உள்ளிட்டோர் படத்தில் நடித்துள்ளனர்.





