தெஹ்ரானில் உள்ள எண்ணெய் சேமிப்பு கிடங்குகள் முதன்முறையாக இலக்கு வைக்கப்பட்டது
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் ஈரான் மீது தொடர்ந்து தாக்குதல்களை மேற்கொண்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தத் தாக்குதல்களில் முதன்முறையாக ஈரான் தலைநகரமான தெஹ்ரானில் உள்ள எண்ணெய் சேமிப்பு கிடங்குகள் மற்றும் சுத்திகரிப்பு நிலையங்கள் இலக்கு வைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால் நகரின் பல பகுதிகளில் பாரிய தீ விபத்துகள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே, ஈரானால் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் பஹ்ரைன் நாட்டில் உள்ள உப்புநீரை குடிநீராக மாற்றும் தொழிற்சாலைக்கு சேதம் ஏற்பட்டதாக அந்த நாட்டின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.





