அவசரமாக புதுடெல்லி பறந்தார் விஜித ஹேரத்!
வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இந்தியாவுக்கு Vijitha Herath இன்று (05) பயணம் மேற்கொண்டுள்ளார்.
ரைசினா கலந்துரையாடலில் பங்கேற்பதற்காகவே அவர் புதடெல்லி சென்றுள்ளார்.
ஈரானிய போர்க்கப்பல், இலங்கைக்கு அருகே சர்வதேச கடற்பரப்பில் அமெரிக்க நீர்மூழ்கியினால் மூழ்கடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்படி கப்பல் இந்தியாவில் கூட்டு பயிற்சியை முடித்துகொண்டு திரும்பும் வழியிலேயே இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறானதொரு பின்புலத்தில் இலங்கை வெளிவிவகார அமைச்சரின் டெல்லி விஜயம் முக்கியத்துவம்மிக்கதாக கருதப்படுகின்றது.





