உலகம்

பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் போர் : அமைதிக்கு அழைப்பு விடுத்த ரஷ்யா!

ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தானுக்கு இடையில் போர் மூண்டுள்ள நிலையில், அமைதியை நிலைநாட்ட வேண்டும் என ரஷ்ய ஜனாதிபதி புட்டின் அழைப்பு விடுத்துள்ளார்.

தாலிபான்களின் எல்லை தாண்டிய தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, காபூல், காந்தஹார் மற்றும் பாக்டியா மாகாணங்களை குறிவைத்து பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது.

இதனை உறுதிப்படுத்திய பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப், ஆப்கானிஸ்தானுடன் ‘வெளிப்படையான போரை’ அறிவித்து, அவர்களின் பொறுமையின் எல்லையை எட்டியதாகக் கூறினார்.

அத்துடன் மேற்படி தாக்குதலில் குறைந்தது 13 பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இரு நாடுகளும் எல்லை தாண்டிய தாக்குதல்களை உடனடியாக நிறுத்தி, இராஜதந்திர வழிமுறைகள் மூலம் தங்கள் வேறுபாடுகளைத் தீர்க்க வேண்டும் என்று ரஷ்யா வலியுறுத்தியுள்ளது.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!