சுரேஷ் சலேவின் கைது பழிவாங்கல்: கம்மன்பில குற்றச்சாட்டு!
அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேயின் கைது பழிவாங்கல் நடவடிக்கையென முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில Udaya Gammanpila குற்றஞ்சாட்டியுள்ளார்.
புலிகளுக்கு எதிரான போரின்போது சுரேஷ் சலே பங்களிப்பு வழங்கியுள்ளார். எனவே, அவரை பழிவாங்குவதற்குரிய எண்ணம் பிரிவினைவாத சக்திகளுக்கு இருக்கலாம் எனவும் கம்மன்பில சுட்டிக்காட்டினார்.
பிரதான சூத்திரதாரி யாரென கண்டுபிடிக்கப்பட வேண்டும். மாறாக அப்பாவி திட்டமிட்ட அடிப்படையில் தண்டிக்கப்படுவதை நாம் ஏற்கமாட்டோம்.
அநீதிக்கு எதிராக முன்னின்று செயல்படுவோம் எனவும் கம்மன்பில குறிப்பிட்டார்.





