“இஸ்ரேல் நாடாளுமன்றில் உரையாற்றும் முதல் இந்திய பிரதமர்”
இந்திய India பிரதமர் நரேந்திர மோடி Narendra Modi இரு நாள் அரசமுறைப் பயணமாக இன்று (25) இஸ்ரேல் பயணமானார்.
இஸ்ரேல் Israel நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி இன்று உரையாற்றவுள்ளார்.
இதன்மூலம், இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்தும் முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையை அவர் பெருகின்றார்.
தனது இஸ்ரேல் பயணத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,
‘‘எனது அன்பு நண்பர் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அழைப்பின் பேரில், பயணம் மேற்கொள்கின்றேன்.
சமீபத்திய ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியையும், சுறுசுறுப்பான, வலுவான, பன்முக மூலோபாய கூட்டாண்மையையும் இந்தியாவும் இஸ்ரேலும் பகிர்ந்து கொள்கின்றன.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பயணத்தின்போது, இஸ்ரேல் ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கையும் பிரதமர் மோடி சந்திக்கவுள்ளார்.





