அரசியல் இலங்கை செய்தி

சங்க மாநாடு தோல்வி: அமைச்சர் சுட்டிக்காட்டு!

“ பௌத்த பிக்குகள் சிலரால் நடத்தப்பட்ட சங்க மாநாடு தோல்வியில் முடிந்துள்ளது.” என்று அமைச்சர் லாந்காந்த Lankantha தெரிவித்தார்.

பௌத்த பிக்குகள் எதிர்கொள்ளும் அநீதிகள், புத்தசாசனம், நாட்டின் நிலை குறித்து ஆராய்வதற்காகவே சங்க மாநாடு நடத்தப்பட்டிருந்தது.

இதில் உரையாற்றிய தேரர்கள் அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்திருந்தனர்.

இந்நிலையில் சங்க மாநாடு தொடர்பில் அமைச்சரிடம் கேள்வி எழுப்பட்டது. இதற்கு பதிலளித்த அமைச்சர் லால்காந்த,

“சங்க மாநாட்டில் 300 இற்கு குறைவான தேரர்களே பங்கேற்றுள்ளனர்.

எண்ணிக்கையின் அடிப்படையில் மாநாடு தோல்வியாகும்.

அரசுக்கு எதிராக எங்கு போராட்டமோ அல்லது மாநாடோ நடந்தாலும், அங்கு சென்று அமர்ந்துகொள்ள வேண்டும் என்ற மனநிலையிலேயே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ உள்ளார்.

சஜித் பிரேமதாசவின் Sajith Premadasa அரசியல் பயணமும் தோல்வியை நோக்கியே செல்கின்றது.” – என்றார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!