தமிழக தேர்தல் ஸ்டாலினுக்கும், விஜய்க்கும் இடையிலான போர்!
நடைபெறவுள்ள தமிழக சட்டப் பேரவை தேர்தலானது விஜய்க்கும், ஸ்டாலினுக்கும் இடையிலான போராகும் என்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தெரிவித்தார்.
வேலூர் மாவட்டம், அகரம்சேரியில் இன்று (23) உரையாற்றுகையிலேயே விஜய் இவ்வாறு கூறினார்.
“மக்களை நேசிக்கிற ஒரு சரியான தலைமை இல்லாததால், முதல்வர் ஸ்டாலின் கொடுத்த பொய்யான வாக்குறுதிகளை நம்பி மக்கள் ஏமாந்தனர்.
இன்று மக்களை நேசிக்கும் இயக்கமாக தவெக வந்துள்ளது.” எனவும் விஜய் சுட்டிக்காட்டினார்.
தற்போது நடக்க இருக்கும் சட்டப்பேரவை தேர்தல், தமிழ்நாட்டு மக்களுக்கும் ஊழல், லஞ்சம், நிர்வாகத்தை சரியாக செய்யாத உங்கள் ஆட்சிக்கும் நடக்கும் போர்.
விஜய்க்கும் ஸ்டாலின் சாருக்கும் இடையே நடைபெறும் போர்தான் இந்த தேர்தல். தீய சக்தி திமுக, தூய சக்தி தவெகவுக்கு இடையேயான போர்.” எனவும் விஜய் குறிப்பிட்டார்.
இதனிடையே, “முரட்டு ஜல்லிக்கட்டு காளைதான் தமிழ்நாட்டின் அரசியல்களம். ஜல்லிக்கட்டு காளையை தில்லாக அடக்கும் சிறிய பையன்தான் தமிழக வெற்றிக் கழகம்” என விஜய் குட்டிக் கதையும் கூறினார்.





