பலஸ்தீன ஒற்றுமை உறுதிமொழி – பிரித்தானியாவில் 1,028 கவுன்சிலர்கள் கையெழுத்து
பலஸ்தீன மக்களுடன் ஒற்றுமையை வெளிப்படுத்தும் உறுதிமொழியில் பிரித்தானியாவில் 1,028 உள்ளூர் கவுன்சிலர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.
இந்த உறுதிமொழி, ஆயுத நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்ட ஓய்வூதிய நிதிகளை விலக்க வேண்டும் என்பதையும், இஸ்ரேலின் சர்வதேச சட்ட மீறல்களுக்கு கவுன்சில்கள் உடந்தையாக இருக்கக் கூடாது என்பதையும் வலியுறுத்துகிறது.
வரவிருக்கும் உள்ளுராட்சி தேர்தல்களில் இது முக்கிய பிரச்சினையாக மாறக்கூடும் என பிரச்சாரகர்கள் நம்புகின்றனர்.
இந்த நடவடிக்கை நெறிமுறை முதலீடுகளை உறுதி செய்யும் முயற்சி என்றும், குடியிருப்பாளர்களின் கோரிக்கையை பிரதிபலிக்கிறது என்றும் ஹாக்னி கிரீன் கட்சி கவுன்சிலர் ஜோ கார்பெட் தெரிவித்தார்.
ஆனால் இஸ்ரேலிய தூதரகம், இந்த உறுதிமொழியை “மிரட்டலுக்கான அவமானகரமான முயற்சி” என விமர்சித்துள்ளது.
காசாவில் இனப்படுகொலை குற்றச்சாட்டுகளையும் இஸ்ரேல் மறுத்துள்ளது.





