ஸ்பெயினில் அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ விபத்து – 05 பேர் உயிரிழப்பு!
ஸ்பெயினின் கேட்டலோனியாவில் (Catalonia) உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் 05 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் நான்கு பேர் சிறு காயங்களுக்கு உள்ளானதாகவும் பிராந்திய தீயணைப்பு வீரர்கள் தெரிவித்துள்ளனர்.
ஓசோனா (Osona) பகுதியில் உள்ள ஐந்து மாடி கட்டிடத்தின் சேமிப்பு அறையில் மேற்படி தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் உயிரிழந்தவர்கள் அனைவரும் இளைஞர்கள் என்றும், சிலர் வயது குறைந்தவர்களாக இருக்கலாம் என்று நம்புவதாகவும் தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சில உடல்கள் கருகிவிட்டதால் உயிரிழந்தவர்களை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும், தீ விபத்துக்கான காரணத்தை அறிய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் கேட்டலோனியா காவல்துறை தெரிவித்துள்ளது.





