இங்கிலாந்து துணைப் பிரதமர் டேவிட் லாம்மி நாட்டை வந்தடைந்தார்!
இங்கிலாந்து துணைப் பிரதமர் டேவிட் லாம்மி (David Lammy) இன்று இலங்கை வந்தடைந்தார்.
இது தொடர்பில் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், இலங்கைக்கான இங்கிலாந்து உயர் ஸ்தானிகர் ஆண்ட்ரூ பேட்ரிக் (Andrew Patrick), இலங்கைக்கு தனது முதல் வருகையை மேற்கொண்ட துணைப் பிரதமர் டேவிட் லாம்மியை (David Lammy) வரவேற்றார்.

இந்த விஜயம் இங்கிலாந்து-இலங்கை கூட்டாண்மையை மீண்டும் உறுதிப்படுத்தும் அதே வேளையில், டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு இங்கிலாந்து வழங்கிய மனதாபிமான உதவிகள் மக்களை சென்றடைந்துள்ளதையும் பாார்வையிடுவார் எனக் கூறப்படுகிறது.
மேலும் இந்த விஜயத்தின் போது, துணைப் பிரதமர் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடவும், திட்டமிடப்பட்டுள்ளார்.





