பிரித்தானிய துணைப் பிரதமர் டேவிட் லாம்மி நாளை இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம்
துணைப் பிரதமர் டேவிட் லாம்மி (David Lammy) ஒரு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக நாளை (17) இலங்கைக்கு விஜயம் மேற்கொள்கிறார்.
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருடன்
கலந்துரையாடலில் ஈடுபடுவார் என்றும்பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு பிரித்தானியா பல்வேறு மனிதாபிமான உதவிகளை வழங்கியுள்ளது.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட சமூகங்களைப் பார்வையிட்டு குழந்தைகள் பாதுகாப்புக்கான உலகளாவிய வணிக ஒப்பந்ததிலும் துணைப் பிரதமர் டேவிட் லாம்மி கையெழுத்திடுவார் என கூறப்படுகிறது
இதற்கான விழா நாளை (17) இலங்கையில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்தில் நடைபெறும்.




