எதிர்க்கட்சி தலைவரின் மரணத்துக்கு புடின் பொறுப்பு கூற வேண்டும்: ஆஸ்திரேலியா வலியுறுத்து!
ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவால்னியின் Alexei Navalny மரணத்துக்கு புடின் Putin நிர்வாகம் பொறுப்புக்கூற வேண்டும் என்று ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பெனி வோங் enny Wong வலியுறுத்தியுள்ளார்.
அலெக்ஸி நவால்னி விஷம் வைத்து கொல்லப்பட்டார் என்பதை பிரிட்டன், பிரான்ஸ், ஜேர்மன், சுவீடன் மற்றும் நெதர்லாந்து ஆகிய ஐரோப்பிய நாடுகள் உறுதி செய்துள்ளன.
மேற்படி நாடுகளை சேர்ந்த வெளியுறவத்துறை அமைச்சர்கள் இதனை பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையிலேயே ஆஸ்திரேலியா மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பில் ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சரின் எக்ஸ் தள பதிவில்,
“அலெக்ஸி நவால்னியின் துயர மரணம் நடந்து ஈராண்டுகள் கடந்துள்ளன. புடினின் அடக்குமுறை ஆட்சிக்கு எதிரான அவரது துணிச்சலையும் எதிர்ப்பையும் நாங்கள் மதிக்கிறோம்.
புடினும், ரஷ்ய அதிகாரிகளும் அவரின் மரணத்திற்கு
பொறுப்பு கூற வேண்டும்.
மேலும் ரஷ்யாவில் மனித உரிமைகளை நிலைநிறுத்த தைரியமாக பாடுபடுபவர்களுக்கு ஆஸ்திரேலியா துணைநிற்கும்.”என்று குறிப்பிடப்பட்டுள்ளது.





