ஊழல் குற்றச்சாட்டு – உக்ரைனின் முன்னாள் எரிசக்தி அமைச்சர் கைது!
உக்ரைனின் முன்னாள் எரிசக்தி அமைச்சர் ஜெர்மன் கலுஷ்செங்கோ (German Galushchenko) கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் நாட்டின் எல்லையை கடக்க முயன்றபோது உக்ரைனின் தேசிய ஊழல் தடுப்புப் பிரிவினரால் (NABU), கைது செய்யப்படதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “ சட்டத்தின் தேவைகள் மற்றும் நீதிமன்றத் தடைகளின்படி “ஆரம்ப விசாரணை நடவடிக்கைகள் நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைனின் எரிசக்தி துறையில் ஊழல் இடம்பெற்றுள்ளதாக NABU வெளிப்படுத்தியதை தொடர்ந்து கடந்த நவம்பர் மாதம் ஜெர்மன் கலுஷ்செங்கோ (German Galushchenko) தனது பதவியை இராஜினாமா செய்திருந்தார்.
உக்ரைனின் சிறப்பு ஊழல் எதிர்ப்பு வழக்கறிஞர் அலுவலகம் (SAPO) வெளியிட்டுள்ள தகவலின்படி, $100 மில்லியன் திட்டத்தில் பிரபல தொழிலதிபரான திமூர் மிண்டிச்சாலுடன் (Timur Mindich) கூட்டிணைந்து பணமோசடி நடவடிக்கையில் அவர் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.





