மன்னாரில் 50 கிலோ கிராமுக்கும் அதிகமான போதைப்பொருள் பறிமுதல்
மன்னார் கடல் பகுதியில் கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனையின் போது 50 கிலோ கிராமுக்கும் அதிகமான ‘ஹஷிஷ்’ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போதே போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த டிங்கி படகொன்றை சோதனையிட்ட போதே இந்த போதைப்பொருள் மீட்கப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணை மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்காக அவர்கள் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.





