பிரான்ஸில் ஏற்பட்ட பனிச்சரிவு : இரு பிரித்தானியர்கள் உயிரிழப்பு!
பிரான்ஸின் ஆல்ப்ஸ் மலைத்தொடரில் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த வீரர்களில் இரண்டு பிரித்தானிய வீரர்களும் அடங்குவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்கிழக்கு பிரான்ஸில் உள்ள ஒரு கிராமத்தில் நேற்று பனிச்சரிவு ஏற்பட்டது.
இதன்போது 05 பேர் கொண்ட குழுவொன்று சிக்கிக் கொண்டதாகவும், அதில் மூவர் உயிரிழந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதில் இரண்டு பிரித்தானிய வீரர்களும் ஒரு பிரெஞ்சு வீரரும் அடங்குவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆல்ப்ஸ் மலைகளில் “மிகக் கடுமையான பனிப்பொழிவு” “விதிவிலக்கான பனிச்சரிவு நிலைமைகளைத் தூண்டியுள்ளது” என்று பிரான்ஸின் வானிலை சேவை குறிப்பிட்டுள்ளது.





