இலங்கை செய்தி

யாழ். மாநகரசபைக்கு முன்பாக போராட்டம் முன்னெடுப்பு!

யாழ். நகர அப்பிள் apple கடை வியாபாரிகள் இன்று மாநகர சபை நுழைவாயிலுக்கு முன்பாக கவனவீர்ப்புப் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர்.

யாழ். மத்திய பஸ் நிலையச் சூழலில் அமைந்துள்ள அப்பிள் கடைகளை அகற்றுவது தொடர்பாக மாநகர சபை உறுப்பினர் ப. தர்சானந்தினால் கொண்டுவரப்பட்ட பிரேரணைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

யாழ். நகரில் அமைந்துள்ள அப்பிள் கடைகளின் செயற்பாடுகள் தொடர்பாக உறுப்பினர் ப.தர்சானந்த் சபையில் முன்வைத்த பிரேரணையினால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகள், தமது கோரிக்கைகள் மற்றும் நியாயங்கள் அடங்கிய மகஜரை மாநகர சபை உறுப்பினர்களிடம் கையளித்தனர்.

நகரப் பகுதியில் வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் தமக்கு ஏற்படும் சவால்கள் மற்றும் குறித்த பிரேரணையால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து இதன்போது அவர்கள் அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டு வந்தனர்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!