அடுத்த கட்ட அரசியல் நகர்வு என்ன? பேராளர் மாநாட்டை நடத்துகிறது ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி!
ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் Democratic Tamil National Alliance பேராளர் மாநாடு எதிர்வரும் 22ஆம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
யாழ். சாவகச்சேரி நகர சபை மண்டபத்தில் நிகழ்வுக்குரிய ஏற்பாடு செய்யப்பட்டுவருகின்றது.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள 5 தமிழ்த் தேசியக் கட்சிகளை ஒருங்கிணைத்தே ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி உருவாக்கப்பட்டது.
இந்நிலையில் எதிர்கால அரசியல் நகர்வுகள் மற்றும் கொள்கை விளக்கங்களை முன்வைக்கும் நோக்கில் மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாநாட்டில் கூட்டணி கட்சிகளின் தலைவர்களும், அரசியல் பிரமுகர்களும், ஆதரவாளர்களும் பங்கேற்கவுள்ளனர். முக்கிய சில தீர்மானங்களும் நிறைவேற்றப்படவுள்ளன.





