ராஜபக்சக்களை தோற்கடிக்க போலி பிரச்சாரம்: நாமல் கொதிப்பு!
“ வடக்கு, கிழக்கு மக்களைப் பற்றி அதிகம் கதைக்கும் இந்த அரசாங்கம் மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.”
இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் SLPP தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச Namal Rajapaksa வலியுறுத்தியுள்ளார்.
“வடக்கு, கிழக்குபோலவே தெற்கிலும் தற்போது ஆளுநர்கள் ஊடாகவே நிர்வாகம் இடம்பெறுகின்றது. ஆளுநர்களின் தேவைக்கேற்ப நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது.
ஜனநாயகம் பற்றி கோஷம் எழுப்பும் இந்த அரசாங்கம், மாகாணசபை விடயத்திலும் ஜனநாயகத்தை நிலைநாட்ட வேண்டும்.
அதேவேளை, 2015 இல் ராஜபக்சக்களை தோற்கடிப்பதற்காக ஜே.வி.பி. பொய்கூறும் அரசியல் பிரசாரத்தை முன்னெடுத்தது. நாம் அவ்வாறான அரசியலில் ஈடுபடமாட்டோம் ” எனவும் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டார்.





