ஜெனிவா இராஜதந்திர சமர் 23 இல் ஆரம்பம்: விஜித தலைமையில் இலங்கை குழு பங்கேற்பு!
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் UN Human Rights Council 61 ஆவது கூட்டத்தொடர் ஜெனிவாவில் எதிர்வரும் 23 ஆம் திகதி ஆரம்பமாகின்றது.
ஏப்ரல் 2 ஆம் திகதிவரை அமர்வுகள் நடைபெறும் என்ற போதிலும் பெப்ரவரி 23 முதல் 27 வரையான காலப்பகுதிக்குள்ளேயே உயர்மட்ட சந்திப்பு இடம்பெறும்.
குறித்த மாநாட்டில் இலங்கையின் சார்பில் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் Vijitha Herath தலைமையிலான குழு பங்கேற்கவுள்ளது.
ஜெனிவாவில் முக்கிய சில சந்திப்புகளை நடத்துவதற்கு இலங்கை குழு திட்டமிட்டுள்ளது.
மாகாண சபைகளுக்கான தேர்தல், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விவகாரம், பயங்கரவாதத்தில் இருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம் மற்றும் தேசிய நல்லிணக்க பொறிமுறை போன்ற விடயங்கள் குறித்து ஜெனிவாவில் விளக்கமளிக்கவுள்ளது.
பொறுப்புக்கூறல் மற்றும் தேசிய நல்லிணக்க பொறிமுறைகள் குறித்து முழுமையான அறிக்கை இந்தக் கூட்டத்தொடரில் சமர்பிக்கப்படும் என தெரியவருகின்றது.





