ரணில், சஜித் ஒன்றிணைய வேண்டும்: நாமல் மீண்டும் வலியுறுத்து!
ஐக்கிய தேசியக் கட்சியும் UNP , ஐக்கிய மக்கள் சக்தியும் SJP ஒன்றிணைய வேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் SLPP தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச Namal Rajapaksa மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
எனினும், மேற்படி தரப்புகளுடன் இணைந்து செயல்படுவதற்கு தமது கட்சி முடிவெடுக்கவில்லை எனவும் அவர் கூறினார்.
“மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். வடக்கு, கிழக்கு மக்களுக்காக இந்த அரசாங்கம் குரல் எழுப்புகின்றது. எனவே, அங்கு தேர்தலை நடத்தும் என நம்புகின்றோம்.
ஜனநாயகம் பற்றி கதைக்கும் அரசாங்கம், ஆளுநர் நிர்வாகத்தை நடத்தால், மக்கள் பிரதிநிதிகளுக்கு இடமளிக்க வேண்டும்.” எனவும் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டார்.





