கனடாவில் இலங்கை பிரஜையின் மோசமான செயற்பாடு – 10 ஆண்டுகள் சிறை தண்டனைக்கு வாய்ப்பு!
கனடாவின் டொராண்டோவில் இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
ஒருவரின் அனுமதியின்றி அவர்களை படம் பிடித்தது தொடர்பில் தொடர்ச்சியாக முறைப்பாடு அளிக்கப்பட்ட நிலையில், அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவர் மீது நான்கு குற்றவியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
45 வயதான அந்த நபர் டொராண்டோ முழுவதும் பொது இடங்களில் பலமுறை தனிநபர்களை அணுகி அவர்களுக்கு குறிப்பிடத்தக்க அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில் ஒளிப்படம் எடுத்ததாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
டொராண்டோ காவல் சேவை வெளியிட்ட அறிக்கையின்படி, அவர் டிசம்பர் 10, 2025 அன்று காவலில் எடுக்கப்பட்ட நிலையில், பிப்ரவரி 4, 2026 அன்று ஒன்ராறியோ நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டொராண்டோ பொலிஸார் அவரது படத்தை வெளியிட்டு, பாதிக்கப்பட்டவர்கள் இருந்தால் தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.
கனடாவின் குற்றவியல் சட்டத்தின் கீழ், குற்றவியல் துன்புறுத்தல் குற்றப்பத்திரிகை மூலம் வழக்குத் தொடரப்பட்டால் அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.





