கமலின் கம்பீர உரையை கொண்டாடும் தமிழர்கள்: திண்டாடும் பா.ஜ.க.!
தமிழ் மொழியின் மேன்மை தொடர்பில் மாநிலங்களவையில் கமல்ஹாசன் ஆற்றிய உரை உலக வாழ் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
சமூகவலைத்தளங்களில் உள்ள தமிழர்கள் கமலின் உரையை பதிவுகள்மூலம் கொண்டாடிவருகின்றனர்.
தமிழ் மொழி யாசகம் பெறுவதற்குகூட உதவாது என புலவர் ஒருவர் கூறினார் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மாநிலங்களவையில் குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதத்திலேயே கமல்ஹாசன் காத்திரமானதொரு உரையை நிகழ்த்தினார்.
இந்நிலையில் பா.ஜ.க. அரசியல் பிரமுகர்கள் சிலர் கமலின் உரையை கேலி செய்துவருகின்றனர்.
“ மாநிலங்களவையில் கமல்ஹாசன் பேசியது எனக்குப் புரியவில்லை.
ஏற்கனவே அவர் பேச்சு புரியாததால்தான் கோவை மக்கள் தோற்கடித்தனர்’’ என பாஜக மகளிரணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் எம்எல்ஏ தெரிவித்தார்.





