இந்தியா

கனடாவிலிருந்து நாடு கடத்தப்படும் இந்திய மாணவர்கள்! எஸ் ஜெய்சங்கர் வெளியிட்டுள்ள அறிக்கை

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள், போலியான பல்கலைக்கழக நுழைவு கடிதங்கள் மூலம் கனடாவிற்குள் நுழைந்திருப்பதாகவும், அது சட்டவிரோதம் என்பதால், அவர்களை வெளியேற்றும் முயற்சியில் கனடாவின் எல்லை சேவை நிறுவனம் ஈடுபட்டு வருவதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் பாதிக்கப்பட்ட மாணவர்கள், போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கனடா எல்லை சேவை நிறுவனம் சமீபத்தில் 700 இந்திய மாணவர்களுக்கு நாடு கடத்தல் தொடர்பான கடிதங்களை வழங்கியுள்ளது.

மாணவர்களின் சேர்க்கை தொடர்பான நுழைவு கடிதங்கள் போலியானவை என கண்டறிந்ததை அடுத்து இந்தக் கடிதங்கள் வழங்கப்பட்டன.

2018ம் வருடம் கனடாவிற்குள் நுழைந்த தாங்கள் அனைவரும், படிப்பையும் முடித்து, நிரந்தர குடியுரிமைக்கு விண்ணப்பித்து காத்திருக்கும் நேரத்தில், கனடாவின் இந்த நடவடிக்கை பேரிடியாக வந்துள்ளதாக போராடும் மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் கனடாவில் இருந்து நாடுகடத்தப்படும் பஞ்சாபைச் சேர்ந்த 700 இந்திய மாணவர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண வெளியுறவு அமைச்சகமும் (MEA) உயர் ஸ்தானிகரும் செயல்பட்டு வருவதாக வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் மாநில வெளிநாடு வாழ் இந்தியர்கள் விவகாரத்துறை அமைச்சர் குல்தீப் சிங் தாலிவால் தலையீட்டிற்குப் பிறகு ஜெய்சங்கரின் அறிக்கை வந்துள்ளது.

கனேடிய கல்வி நிறுவனங்களுக்கான அனுமதிக் கடிதங்கள் போலியானவை என்று கனேடிய அதிகாரிகள் கண்டறிந்ததை அடுத்து, இந்த மாணவர்கள் நாடு கடத்தப்படும் அபாயத்தில் உள்ளனர். மார்ச் மாதம் கனடாவில் நிரந்தர வதிவிடத்திற்காக மாணவர்கள் விண்ணப்பித்தபோது இந்தப் பிரச்சினை வெளிப்பட்டுள்ளது.

 

 

(Visited 16 times, 1 visits today)
Avatar

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே

You cannot copy content of this page

Skip to content