உலகம்

ஆஸ்திரேலியாவில் மலைப்பாம்புடன் படுத்து உறங்கிய பெண்!

ஆஸ்திரேலியாவில் பெண் ஒருவர் தூங்கி எழும்போது நீண்ட மலைப்பாம்பு ஒன்று தன்மீது கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

குயின்ஸ்லாந்தின் (Queensland) பிரிஸ்பேனில் (Brisbane) வசிக்கும் ரேச்சல் ப்ளூர் (Rachel Bloor) என்ற குறித்த பெண் தன்மீது கனமாக ஏதே கிடப்பதாக உணர்ந்ததாகவும், இருப்பினும் அதனை தனது நாய் என்று கருதியதாகவும் தெரிவித்துள்ளார்.

நாயை அரவணைக்க தனது போர்வையின்மேல் கைவைத்தபோதே அது ஒரு மலைப்பாம்பு என்பதை இனங்கண்டதாக கூறியுள்ளார்.

குறித்த பாம்பு 2.5 மீற்றர் நீளம் வரை இருந்ததாக தெரிவித்த அவர், பின்னர் உதவிக்கு யாரையும் அழைக்காமல் கவனமாக பாம்பை வெளியேற்றியதாக  பிபிசி ஊடகத்திடம் தெரிவித்துள்ளார்.

மேற்படி சம்பவம் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவின் கடற்பரைப் பகுதிகளில் இவ்வாறு விஷமற்ற மலைப்பாம்புகள் வாழ்வது இயல்பானது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!