விளையாட்டு

பரபரப்புக்கு மத்தியில் இந்தியா, பங்களாதேஷ் அணிகள் இன்று பலப்பரீட்சை!

19 வயதுக்குட்பட்டோருக்கான ஐசிசி ICC U-19 உலகக் கிண்ண தொடர்பில் இந்தியா India மற்றும் பங்களாதேஷ் Bangladesh அணிகள் இன்று (17) பலப்பரீட்சை நடத்துகின்றன.

சிம்பாப்வே Zimbabwe, புலவாயோ Bulawayo நகரிலுள்ள மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று பிற்பகல் ஒரு மணிக்கு போட்டி ஆரம்பமாகும்.

ஐசிசி U-19 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் சிம்பாப்வே மற்றும் நமீபியாவில் Namibia நடைபெற்று வருகிறது.

16 அணிகள் பங்கேற்றுள்ள இத்தொடரில் ‘B’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் அமெரிக்காவை 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

இந்திய U-19 அணி கடைசியாக விளையாடிய 17 ஆட்டங்களில் 14-ல் வெற்றி கண்டுள்ளது. இந்த வெற்றியை இன்றைய ஆட்டத்திலும் தொடரச் செய்வதில் அவ்வணி தீவிரம் காட்டக்கூடும்.

பங்களாதேஷ் U-19 அணி அஸிசுல் ஹக்கீம் தலைமையில் களமிறங்குகிறது. துணை தலைவரான ஜவாத் அப்ரார் உள்ளார்.

இவர்கள் இருவரும் கடந்த ஆண்டு 2024ம் ஆண்டு நடைபெற்ற U-19 உலகக் கோப்பை தொடருக்கு பின்னர் இளையோருக்கான ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக விளையாடி ஆயிரம் ஓட்டங்களை குவித்துள்ளனர்.

இந்தியாவுக்கும், பங்களாதேசுக்கும் இடையில் கிரிக்கெட் ரீதியில் தற்போது மோதல் வெடித்துள்ள சூழ்நிலையில் இன்றைய போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Dila

About Author

You may also like

இந்தியா விளையாட்டு

ராஜஸ்தான் வெற்றிபெற 155 ரன்களை இலக்காக நிர்ணயித்த லக்னோ

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் 26-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர்
இந்தியா விளையாட்டு

10 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற 26வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ
error: Content is protected !!